சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ - அடுத்தடுத்த வழக்குகளை பதிவு செய்யும் சிபிசிஐடி
சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே 4 போக்சோ மற்றும் ஒரு வன்கொடுமை வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story