பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி சிறையில் அடைப்பு

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
x
கோவை உக்கடம் பகுதியில் பிளஸ் 2 படித்த மாணவி நேற்று முன் தினம், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில் படித்த ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும், அதனால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டினர். தற்கொலை செய்து கொண்ட மாணவி சிலரின் பெயரைக் குறிப்பிட்டு கடிதமும் எழுதி இருந்தார். தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை, நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்