பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி - ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்

மதுரையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
x
மதுரை அண்ணாநகர் அருகே செண்பகத்தோட்டம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, குருவி விஜய் என்ற ரவுடி நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். அப்போது, அந்தப் பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு போன் செய்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த நிலையில், ரவுடி குருவி விஜயும், அவரது கூட்டாளிகளும் போலீசாரை தாக்க முயன்று உள்ளனர். உடனடியாக போலீசார் ரவுடி குருவி விஜயை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ரவுடியின் கூட்டாளிகளும் பிடிபட்ட நிலையில், துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் அடைந்த ரவுடியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்