கிணற்றில் தவறி விழுந்த பெண் - தீயணைப்பு துறையினர் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த பெண், உயிருடன் மீட்கப்பட்டார்.
முதுமொத்தன்மொழி கிராமத்தைச் சேர்ந்த பொற்கிழி என்ற பெண், கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிய போது, தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திசையன்விளை தீயணைப்பு துறையினர், பொற்கிழியை உயிருடன் மீட்டனர். பின்னர் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story