இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் - வழக்கை பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டிணம் மீனவர் ராஜ்கிரனின் வழக்கை அவசர வழக்காக வரும் 15 ஆம் தேதிக்கு பட்டியலிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் - வழக்கை பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரனின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செந்திருந்தார். அதில், உயிரிழந்த எனது கணவர் ராஜ்கிரனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் தரப்பில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எந்த நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிடவேண்டும் என,  நிர்வாக நீதிபதியிடம் அனுமதி பெற்று,  நவம்பர் 15 ம் தேதிக்கு பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்