மழை பாதிப்பு - 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை
மழை பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story