"மழையால் 3,700 ஹெக்டேர் பாதிப்பு" - அமைச்சர் ஐ.பெரியசாமி

பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
x
பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகேயுள்ள  அண்டமி மோகூர் கிராமத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3 ஆயிரத்து 700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்