பலத்த மழை எதிரொலி - 8 விமானங்களின் சேவை ரத்து

சென்னையில் பலத்த மழை எதிரொலியாக, மதுரை, திருச்சி மும்பை, சாா்ஜா செல்லும் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பலத்த மழை எதிரொலி - 8 விமானங்களின் சேவை ரத்து
x
மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு 40 பயணிகளுடன் செல்ல இருந்த இன்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,  இரவு 7.55 மணிக்கு திருச்சிக்கு 41 பயணிகளுடன் செல்ல இருந்த இன்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அது போல் இரவு 7.30 மணிக்கு மதுரையில் இருந்து 74 பயணிகளும் இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து 34 பயணிகளுடன் வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதே போல், சார்ஜாவில் இருந்து இரவு 8.55 மணிக்கு 154 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு  விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானமும், இன்று இரவு 9.35 மணிக்கு 127 பயணிகளுடன் சாா்ஜா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  மழை பாதிப்பு அதிகமானால் மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்