தொடர் மழையால், கந்தன்சாவடி ஓஎம்ஆர் சாலையில் முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீர்
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால், கந்தன்சாவடி ஓ.எம்.ஆர். சாலையில், ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது.
சென்னை மாநகரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முழங்கால் அளவு தேங்கி நிற்கும் தண்ணீரால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதேபோல், கந்தன்சாவடி-பெருங்குடி ஓ.எம்.ஆர். சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு, ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாநகராட்சி பேருந்து ஓட்டுநர்களும், மற்ற வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
Next Story