பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, பஞ்சலிங்க அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்
அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியை சூழ்ந்தது. வெள்ளத்தில், அருவிக்கு செல்லும் தரைப்பாலமும்  காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில்
பாதுகாப்பு கருதி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்