காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

திண்டிவனம் அருகே காதல் திருமணம் செய்த பெண் 4 மாதத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
x
ஒலக்கூர் அடுத்த எஸ். கடூர் கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகள் வினிதா. 21 வயதான வினிதா, ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, வினிதாவின் தாய் லோகநாயகி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த வினிதா, தாய் வீட்டிற்கு அருகில் இருந்த தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்