வாலிபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது

மயிலாடுதுறையில், வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது
x
மேலப்பட்டமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர், சீனிவாசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சதீஷின் உறவினர் வினோத் என்பவருக்கும், பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவிக்கும் உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்புக்கும் பிரச்னை இருந்து வந்த நிலையில், பழனிவேலுவின் உறவினர்கள் சதீஷை கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதனிடையே, நான்கு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்