வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளிகள் 5 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன், வாசு ஆகியோர் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்த நிலையில், மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி ஜெயராமனை தனது நண்பர்களின் உதவியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த வாசு தப்பி ஓடினார். இந்நிலையில் குற்றவாளிகள் வாசு உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Next Story