300அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - தாயுடன் கைக்குழந்தை உள்பட மூவர் பலி

கொடைக்கானல் அடுத்த அடுக்கம் மலைப்பாதையில், 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
300அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - தாயுடன் கைக்குழந்தை உள்பட மூவர் பலி
x

மதுரை சமயநல்லூர் அடுத்த தேனூரைச் சேர்ந்த கோகுல் என்ற வழக்கறிஞர், மனைவி நந்தினி, மாமியார், குழந்தை மற்றும் கார்த்தி ஆகியோருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலையில், அடுக்கம் பகுதியில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டுள்ளது. தகவலறிந்து வந்த தேனி மாவட்ட தீயணைப்புத் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு தேனியில் சிகிச்சையில் உள்ளனர். கோகுலின் மனைவி, மாமியார், கைக்குழந்தை மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த பெரியகுளம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்