ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது? - இன்று முடிவு
நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளில் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், ரஜினி நன்றாக பேசுவதோடு உணவு எடுத்து கொள்வதாகவும், அன்றாட பழக்கங்களை செய்து வருவதாகவும் மருத்துவ குழு கூறியுள்ளது. ரஜினி மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்று பிற்பகல் முடிவு செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story

