அறுந்து கிடந்த மின்சாரக் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அறுந்து கிடந்த மின்சாரக் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் விபத்து
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

பொய்யக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. லாரி ஊழியரான கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலாஜி ஆற்றில் இருந்து திருடப்பட்ட மணலை கட்டுமானப் பணிக்காக கொட்டி விட்டு, அங்கு அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை கேபிள் வயர் என்று நினைத்து பிடித்த போது, உடனடியாக மின்சாரம் தாக்கி பாலாஜி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


Next Story

மேலும் செய்திகள்