போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன்; உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? - தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்
தூத்துக்குடியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகனின் உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? என போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகனின் உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? என போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டம்புளி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான துரைமுருகன், கடந்த 15ஆம் தேதி போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதலில் என்கவுன்ட்டர் நடந்தது. இதனிடையே துரைமுருகனின் சடலத்தை உடற்கூராய்வு செய்த போது உடலில் தோட்டாக்கள் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் தோட்டாக்களை தேடி வருகின்றனர்.
Next Story