மூதாட்டி சேலையில் மளமளவென பற்றிய தீயை அணைத்த காவலர் - வைரல் வீடியோ

கோவிலில் மூதாட்டி ஒருவரின் உடையில் பற்றிய தீயை போக்குவரத்து காவலர் அணைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மூதாட்டி சேலையில் மளமளவென பற்றிய  தீயை அணைத்த காவலர் - வைரல் வீடியோ
x
கோவிலில் மூதாட்டி ஒருவரின் உடையில் பற்றிய தீயை போக்குவரத்து காவலர் அணைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள அம்மன் கோவிலில், வழிபட வந்த மூதாட்டியின் சேலையில் லேசாக தீ பற்றியது. இதை அவர் கவனிக்காததால், மளமளவென தீ பரவ ஆரம்பித்தது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பணியில் இருந்த செம்பியம் காவல் நிலைய போக்கு வரத்து காவலர் செந்தில் ஓடி வந்தார். மிகௌம் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அவர் மூதாட்டியைக் காப்பாற்றினார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மக்கள் காவலர் செந்திலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்