"இளைஞர்களை கவர்ந்த தலைசிறந்த பண்பாளர்"; நீடூழி வாழ வேண்டும் - ரஜினிக்கு ஆளுநர் வாழ்த்து

பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை கவர்ந்த தலைசிறந்த பண்பாளர்; நீடூழி வாழ வேண்டும் - ரஜினிக்கு ஆளுநர் வாழ்த்து
x
பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தாதா சாகேப்‌ பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்திய திரையுலகில் தனது வியத்தகு பங்களிப்பிற்காக நடிகர் ரஜினிக்கு வெகு சிலருக்கே கிடைக்கப்பெறும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருப்பதற்கு தனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினி நல்ல உடல்நலத்தோடு நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்