மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தாயின் இரண்டாவது கணவர் கைது

சென்னையில், மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தாயின் இரண்டாவது கணவர் கைது
x
சென்னையில், மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராயபுரம் ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த சந்திரா என்பவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் நிரோஷாவின் கணவர், ஆறு ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, தனது மகள் நிரோஷா, கௌதம்  என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், கௌதம் தனது மூன்று பெண் பேரக்குழந்தைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மறுக்கும் சிறுமிகளை சூடு வைத்தும், பெல்டால் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, கெளதமை கைது செய்த ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்,  விசாரணைக்கு பின், போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்