சூடு பிடிக்கும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் - கனகராஜ் மரண வழக்கு மீண்டும் விசாரணை

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் உயிரிழந்த வழக்கு விசாரணை சேலத்தில் இன்று துவங்கியது.
சூடு பிடிக்கும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் - கனகராஜ் மரண வழக்கு மீண்டும் விசாரணை
x
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் கடந்த 2017ல் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு, விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டு ஆத்தூர் நீதிமன்றத்திலும் நடந்து முடிந்தது. இந்த நிலையில் கனகராஜின் மரணம் குறித்த சர்ச்சையும் எழுந்தது. கொடநாடு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், கனகராஜின் மரணம் குறித்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார். இதன்பேரில் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் இன்று முதல் விசாரணையை துவக்கி உள்ளார். கனகராஜ் விபத்தில் இறந்தாரா? வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து கூடுதல் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்