25ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் விழா - ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

டெல்லியில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
25ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் விழா - ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
x
டெல்லியில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த விருது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் விழாவில், தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இதன்படி நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்