பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - 9 பேருக்கு வழங்கப்பட்ட பெண்களின் வாக்குமூல நகல்

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வாக்குமூலத்தின் நகல் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - 9 பேருக்கு வழங்கப்பட்ட பெண்களின் வாக்குமூல நகல்
x
பொள்ளாச்சியில் இளம்பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வாக்குமூலத்தின் நகல் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முதற்கட்டமாக 5 பேரும், அடுத்தடுத்து 4 பேர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இன்று வழக்கு விசாரணைக்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 28ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்