பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது
x
புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி, சுரேஷ்குமாரும் அவரது நண்பரும் சிறுமியை மிரட்டியுள்ளனர். இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சுரேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளி சுதர்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்