வாணியம்பாடியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா - தள்ளுமுள்ளு

வாணியம்பாடியில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வாணியம்பாடியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா - தள்ளுமுள்ளு
x
வாணியம்பாடியில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்னர், வாகனத்தில் ஏறுவது தொடர்பாக திமுக உறுப்பினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.  ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது . தகவலறிந்து வந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்வில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டதால், திமுகவினர் இரு பிரிவினராக பிரிந்து செயல்பட்டுவருவதாக ஆலங்காயம் 
மக்கள் தெரிவித்தனர். திமுகவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Next Story

மேலும் செய்திகள்