உணவகத்திற்குள் மது அருந்திய குடிமகன்கள்: தட்டிக்கேட்ட உணவக ஊழியருக்கு அரிவாள் வெட்டு

மதுரையில் உணவகத்தில் மது அருந்திய வாடிக்கையாளர்களை தட்டிக்கேட்ட உணவக ஊழியர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்திற்குள் மது அருந்திய குடிமகன்கள்: தட்டிக்கேட்ட உணவக ஊழியருக்கு அரிவாள் வெட்டு
x
மதுரை முனிச்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் காமராஜபுரத்தை சேர்ந்த 4 பேர் உணவருந்த சென்றனர். அப்போது உணவகத்திற்குள்அமர்ந்துகொண்டு அவர்கள், மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் அவர்களை எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது இதுக்குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்