விவசாய தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன் - யாருக்கும் தெரியாமல் புதைத்தது ஏன்?
சத்தியமங்கலம் அருகே மனைவி உயிரிழந்ததாக கூறி அவரின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் கணவன் புதைத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள ஓலக்காரன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் மனைவி துளசிமணி. கணவன், மனைவி இருவரும் விவசாய தோட்டத்தில் வசித்து வந்த நிலையில் திடீரென தோட்டப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வந்து விசாரித்த போது மனைவி உயிரிழந்ததால் அவரை புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். விஜயதசமி நாளன்று மனைவி உயிரிழந்ததால் ஊரில் யாரிடமும் சொல்லவில்லை என்றும் ஆறுமுகம் கூறியிருக்கிறார். இதன்பேரில் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனை நடத்தினர்.
இதன் முடிவுகளை பொறுத்தே துளசிமணி கொலை செய்யப்பட்டாரா? என தெரியவரும்.
Next Story