முதல் முறையாக நாளை ஆளுநரை சந்திக்க உள்ள ஈபிஎஸ்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.
முதல் முறையாக நாளை ஆளுநரை சந்திக்க உள்ள ஈபிஎஸ்
x
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், அரசியல் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்