கிருஷ்ணகிரியில் பரபரப்பு - நகைக்காக மூதாட்டி கொலை

கிருஷ்னகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பரபரப்பு - நகைக்காக மூதாட்டி கொலை
x
கிருஷ்னகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெடுமருதி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான சூடம்மா, மகன் திம்மராஜ் வீட்டில் வசித்து வந்துள்ளார். பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்த சூடம்மா, காலை வரை வீடு திரும்பாததால், அவரது மகன் தேடிப் பார்த்த போது, வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகில், சூடம்மா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருந்த 4 சவரன் நகையும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இது குறித்து போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மூதாட்டி நகைக்காகத் தான் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதும் காரனங்களா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்