பூச்சி மருந்து குடித்து +2 மாணவி தற்கொலை : காதல் தொல்லையால் தற்கொலை என குற்றச்சாட்டு - தர்ணாவில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள்

அரியலூர் அருகே காதல் தொல்லையால் தங்களது மகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக, பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பூச்சி மருந்து குடித்து +2 மாணவி தற்கொலை : காதல் தொல்லையால் தற்கொலை என குற்றச்சாட்டு - தர்ணாவில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள்
x
அரியலூர் அருகே காதல் தொல்லையால் தங்களது மகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக, பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி தம்பதியர் வேலாயுதம் - கண்ணகி. இவர்களது இரண்டாவது மகள் பூஜா, அரியலூரில் 12-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இதனிடையே, மாணவி பூஜாவை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது. பூஜா அவரை காதலிக்காத நிலையில், அந்த இளைஞர் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், மாணவி பூஜா பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து உள்ளார். காதல் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் பூஜா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூர் பேருந்து நிலையம் அருகே அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்