நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் வேதனை
x
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்கலாக பெய்த கனமழை காரணமாக மருதுறை நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நொய்யல் தடுப்பணையான, ஒரத்துப் பாளையம் அணைக்கு வினாடிக்கு 238 கன அடி நீர் வந்து கொண்டுள்ள அதே சமயம் நீர் வெளியேற்றம் 298 கன அடியாக உள்ளது. நீர் வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்று நீரில் டிடிஎஸ் அளவு ஆயிரத்து 800ஆக உள்ளதால் இந்த நீரை  விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்