மதுவுக்கு அடிமையான சைக்கோ மகனால் கொலை செய்யப்பட்ட தந்தை... வீடு முழுக்கவே பீர் பாட்டில்கள், குப்பைகள்

கடலூரில் வேலைக்கார பெண்ணுக்கு தந்தை உதவி செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த சைக்கோ மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுவுக்கு அடிமையான சைக்கோ மகனால் கொலை செய்யப்பட்ட தந்தை... வீடு முழுக்கவே பீர் பாட்டில்கள், குப்பைகள்
x
கடலூரில் வேலைக்கார பெண்ணுக்கு தந்தை உதவி செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த சைக்கோ மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடலூர் அனைகுப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். துணை கலெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மனைவியும் கேன்சர் நோயால் உயிரிழந்த நிலையில் தன் மகன் கார்த்தி என்பவருடன் வசித்து வந்தார். மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையான கார்த்தி, தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இவர்களின் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு சுப்பிரமணியன் நகைகள் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி செய்ததாக தெரிகிறது. இதனை கார்த்தி கண்டிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன் தந்தையை அடித்தே கொலை செய்துள்ளார் கார்த்தி. பின்னர் ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் என போன் செய்யவே, இந்த விவகாரம் போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் வந்து பார்த்த போது, வீட்டில் ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் இருந்ததும், அதற்கு நடுவே கார்த்தி இருந்ததும் தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இருந்ததும் உறுதியான நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்