முறையற்ற உறவுக்காக கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி

கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முறையற்ற உறவுக்காக கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி
x
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் முன்னாள் அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளராக இருந்தவர். 

இவரின் மகன் இளங்கோ, சென்னையில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதிமுகவில் இருந்து வந்த நிலையில், தன் மாமன் மகளான உமா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 

இதனிடையே தன் மனைவி உமாவுக்கு சங்கரன்கோவில் அரசு மாணவியர் விடுதியில் சமையல் பணி  செய்யும் வேலையை வாங்கித் தந்துள்ளார். இதற்காக இவர்கள், விடுதியின் அருகேயே வாடகை வீடு பார்த்து தங்கி உள்ளனர். வேலை விஷயமாக இளங்கோ சென்னைக்கு சென்று விடுவதால், உமா தன் குழந்தையுடன் தனியே இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த முத்துக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது முறையற்ற உறவாக தொடர்ந்திருக்கிறது...

இந்த விவகாரம் இளங்கோவிற்கு தெரியவரவே, அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. 

இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளார் இளங்கோ. அப்போது அவரை தீர்த்து கட்ட தன் காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார் உமா. இளங்கோவை தனியே அழைத்துச் சென்ற முத்துக்குமார், அவருக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்து தான் வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளார். 

சடலத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரித்த போது தான் நடந்த அத்தனையும் தெரியவந்தது. மனைவி உமா போட்டுக் கொடுத்த திட்டத்தின் படியே இந்த கொடூர கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது. இதன்பேரில் கொலை செய்த முத்துக்குமார், உமா, கொலைக்கு உதவிய சீனிவாசன் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்