ஆற்றில் குளிக்க சென்ற நபர் உயிரிழப்பு

திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் குளிக்க சென்ற நபர் உயிரிழப்பு
x
திருவனந்தபுரத்தை சேர்ந்த அபிஷேக் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் விதுரா கல்லார் தடுப்பணையில், குளிப்பதற்காக சென்றனர். அதில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட அபிஷேக்  சிறுது நேரத்தில் மரக்கிளையில் சிக்கி கரையொதுங்கியுள்ளார். அபிஷேக்கை மீட்ட கரையோரவாசிகள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விதுரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்