பயங்கரவாத குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை - அமைச்சர் ரகுபதி

10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலையில் பயங்கரவாத குற்றவாளிகளை விடுவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை - அமைச்சர் ரகுபதி
x
 திருச்சி மத்திய சிறைச்சாலையில் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, முதலமைச்சர் அறிவித்தப்படி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற 700 ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிப்பதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றார். எனினும், நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்படும் என்றும், குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்