அதிமுக பொன்விழா ஆண்டு; எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை -ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
x
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அதிமுக ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 50-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், முக்கிய நிர்வாகிகளுடன் வருகை தந்தனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பிய நிலையில், தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிமுக பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்ட இருவரும், தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு மறைந்த அதிமுக தொண்டர்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கினர்.

அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கம்/ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்:

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் களைகட்டியது. அவ்வை சண்முகம் சாலையில்,  ஆடல், பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சாலையின் ஓரத்தில் பிரமாண்ட ரப்பர் யானை ஒன்று, காண்போரைக் கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழும் விதமாக பாடல்கள் இசைக்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்