கோயில் உண்டியலில் கைவரிசை - பூட்டை உடைத்து சென்ற கொள்ளையர்கள் : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே கோயில் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோயில் உண்டியலில் கைவரிசை - பூட்டை உடைத்து சென்ற கொள்ளையர்கள் : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
x
உளுந்தூர்பேட்டை அருகே கோயில் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலங்கிரி கிராமத்தில் உள்ள பழமையான அய்யனார் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், அங்கிருந்த வெள்ளி குத்து விளக்கு, பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது. இவற்றின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்