குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு வளைவை தாண்டி விழும் தண்ணீர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர்  சீறிப்பாய்ந்து விழுகிறது. இதேபோன்று  ஐந்தருவியிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்