மசாஜ் சென்டர் நடத்திய பெண் கொலை: தொடர்புகளை விசாரித்து வரும் போலீஸ்

சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்திய பெண்ணை கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மசாஜ் சென்டர் நடத்திய பெண் கொலை: தொடர்புகளை விசாரித்து வரும் போலீஸ்
x
சேலம் குமாரசாமிபட்டியில் அதிமுக பிரமுகரான நடேசனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான 27 வயது பெண் தேஜ்மண்டல், கணவர் பிரதாப்புடன் குடியிருந்தார். 

இந்நிலையில், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்ட பிரதாப், தான் சென்னையில் இருப்பதாகவும், தேஜ்மண்டல் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

இதனையடுத்து உரிமையாளர் நடேசன் அங்கு சென்றபோது, உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டில், துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து நடேசன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

அதில்​, வீட்டின் பரணில் இருந்த சூட்கேஸில், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் அரை நிர்வாணத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.  

பாலியல் தொழிலில் பிடிபட்ட நபர்களிடம், தேஸ்மண்டல் தொடர்பில் இருந்ததாகவும், பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார், பழைய தொடர்புகள் மற்றும் வழக்குகள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்