100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை - தேசிய கொடியின் நிறத்தில் காட்சியளித்த ஐந்துரதம்

நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய கொடியின் நிறத்தில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை - தேசிய கொடியின் நிறத்தில் காட்சியளித்த ஐந்துரதம்
x
நாடு முழுவதும் இதுவரை 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிகழ்த்தியுள்ள இந்த சாதனையை ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 புராதன சின்னங்களை ஒளிரும் மின் விளக்குகளால் மக்களுக்கு காட்சி படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்துரதம் புராதன சின்னம் ஒலிரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்