மாணவரை மண்டியிட வைத்து தாக்கிய ஆசிரியர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
சிதம்பரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவரை மண்டியிட வைத்து ஆசிரியர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வகுப்பை கட் அடித்து மாணவர் வெளியே சென்றதால் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. மாணவரை மண்டியிட வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியர் காலால் மிதித்து அவமரியாதை செய்கிறார். இதை வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சி அடைந்த போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story