உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோல்வி - கிணற்றில் குதித்து மகள் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வியடைந்ததால், மகள் தற்கொலை செய்து கொண்டார்.
ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில், 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் மனமுடைந்த அவரது மகள் வான்மதி, விஷம் அருந்தி விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், வான்மதியின் சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story