துப்பாக்கி, பட்டாகத்தி, கஞ்சா பொட்டலங்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 3 பேர்

திருவள்ளூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் சிக்கிய 3 பேரை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
துப்பாக்கி, பட்டாகத்தி, கஞ்சா பொட்டலங்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 3 பேர்
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி அருகே  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி சோதனையிட்டபோது, மறைத்து வைத்து ஆந்திராவில் இருந்து  நாட்டு துப்பாக்கி,  பட்டா கத்தி மற்றும் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், அவர்கள் புதுக்கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நடராஜ், திருச்சி துறையூரை சேர்ந்த சரண்ராஜ், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அருண்குமார் என்பதும், மூவரும் பழைய கொலைக்குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்த‌து.   அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்து வரும் போலீசார், பயங்கர ஆயுதங்களை கொண்டு சென்றதற்கான காரணம் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்