ஆர்டிஓ அதிகாரி வீட்டில் ரெய்டு நிறைவு - 190 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல்

தேனி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முரளிதரன் வீட்டில் இருந்து 190 சவரன் நகை, பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆர்டிஓ அதிகாரி வீட்டில் ரெய்டு நிறைவு - 190 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
முன்னாள் போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் தற்போது தேனி வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சென்னை, தேனி, மதுரை ஆகிய பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் 84 லட்சத்து 73 ஆயிரத்து 120 ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 190 சவரன் தங்க நகை, 2468 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 43 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்