சீமானை கைது செய்யுமாறு காங்கிரஸ் மனு - பயங்கரவாதத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை, உபா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
சீமானை கைது செய்யுமாறு காங்கிரஸ் மனு - பயங்கரவாதத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு
x
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை, உபா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரியில் நடந்த நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், சீமான் முன்னிலையில் துரைமுருகன் பேசியது மிகவும் ஆபத்தானது என்றும், சீமானின் வழிகாட்டல் தவறானது என்றும் கூறினார். தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டு வெடிக்கும் என்பதை போன்று பேசுவது ஏற்புடையது அல்ல என்றும், உபா சட்டத்தில் சீமானை கைது செய்யவும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களை சீமான் தவறாக வழி நடத்துவதாகவும் ஜோதிமணி கண்டனம் தெரிவித்தார். அப்போது, எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை உடனிருந்தார். 


Next Story

மேலும் செய்திகள்