வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என வழக்கு - தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை தெரிவித்த உயர்நீதிமன்றம்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என வழக்கு - தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை தெரிவித்த உயர்நீதிமன்றம்
x
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் வீடியோ பதிவு செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது,  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருவதாக கூறிய நீதிபதிகள், சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மாநில தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டிருக்கும் என கூறினர். வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்ய கோரியதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்