பெண்ணிடம் செயின் பறித்த வடமாநில கும்பல் - ஏரியில் பதுங்கிய கொள்ளை கும்பல் : ஒருவர் என்கவுன்ட்டர், போலீசில் பிடிபட்ட 2 பேர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்ணிடம் நகை பறித்துவிட்டு ஏரியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மற்ற 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பெண்ணிடம் செயின் பறித்த வடமாநில கும்பல் - ஏரியில் பதுங்கிய கொள்ளை கும்பல் : ஒருவர் என்கவுன்ட்டர், போலீசில் பிடிபட்ட 2 பேர்
x
ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் நகையை பறித்த வடமாநில கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரிப்பகுதியில் பதுங்கியது. நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க ஏரியில் முகாமிட்டனர். இரவிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் இன்று கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின்போது போலீசார் தரப்பில் இருவர் காயமடைந்தனர். இதையடுத்து பதுங்கியிருந்த மேலும் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொள்ளை கும்பலிடம் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்