அரசுப்பேருந்தை முந்த முயன்ற ஆம்னி பேருந்து - நிலை தடுமாறி விபத்து

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே ஆம்னி பேருந்து அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப்பேருந்தை முந்த முயன்ற ஆம்னி பேருந்து - நிலை தடுமாறி விபத்து
x
எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் ஆம்னி பேருந்தில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். முன்னே சென்ற அரசுப்பேருந்தை முந்த முயன்றதில் ஆம்னி பேருந்து நிலை தடுமாறியது. அப்போது பின்னே வந்த சரக்கு லாரியும் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஓட்டுநர் உட்பட 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்