நிதி நிறுவன அதிபர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிதி நிறுவன அதிபர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி நிறுவன அதிபர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை
x
புள்ளாக்கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் தயானந்த். இவரது மனைவி அன்னப்பிரியா, நள்ளிரவில் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது கணவனுக்கு வலிப்பு வந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். வேகமாக உதவிக்கு வந்த உறவினர்கள், தயானந்த் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், நிதி நிறுவன அதிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி அன்னப்பிரியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்