டாஸ்மாக் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

பணத்தை கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த மற்றொருவர் உடலில் துப்பாக்கி குண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்தக் கடையின் விற்பனையாளர்களான ராம், துளசிதாஸ் இருவரும் விற்பனை முடித்து வீட்டுக்கு கிளம்பியுள்ளனர். மதுபாரில் இருந்த பைக்கை எடுக்கச் சென்றபோது, திடீரென வந்த மர்ம கும்பல், விற்பனை பணத்தைக் கேட்டு இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய ராம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, மார்பு பகுதியில் வலி இருந்ததால், ஸ்கேன் செய்து பார்த்ததில், துப்பாக்கி குண்டு இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் அதை  அகற்றிய நிலையில், உயிரிழந்த துளசிதாஸின் உடலிலும், துப்பாக்கி குண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டது வடமாநில தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்